Dienstag, August 17, 2004

பிரபல பின்னணிப் பாடகி ஜிக்கி காலமானார்

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி ஜிக்கி புற்று நோயினால் நேற்று தனது 70வது வயதில் காலமானார்.

காலம் சென்ற பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எம். ராஜா அவர்களின் மனைவியான இவர் கடந்த 1950ம் ஆண்டு தொடக்கம் 1960ம் ஆண்டு காலம் வரை மிக பிரபல்யம் பெற்று விளங்கிய பாடகியாவார்.

இவர் கல்யாண ஊர்வலம் வரும்... மயக்கும் மாலைபொழுதே நீ போ... போன்ற புகழ்பெற்ற பாடல்கள் உட்பட, சுமார் 10 ஆயிரம் வரையிலான பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.

Jikki---- a Voice First and Last of its kind

Jikki, thrilled the entire world of music with her rare variety of voice and her special touch of vocal chords would be ringing in the ears of everybody. At the outset she won the hearts of Telugus with only one song "Eruvaka saagalo rannao chinnanna" from the film "Rojulu Marai".

Born in a middle class family as PG Krishanveni in Chandragiri, Chittoor district, she was introduced in "Pantulamma" as a child artist and continued to exhibit her talents of acting and singing in "Gollabhama" and "Mangalasutram". She took up singing as full fledged profession at the age of 16 and stopped acting. Around ten thousand songs were there to her credit in Telugu, Tamil, Malayalam and Hindi too.

The songs in the film Devadas (1953) sung by her became very popular with music lovers and still they feel afresh. Rajkapoor's "Ah" was reproduced as "Premalekhalu" and Shankar Jaikishan composed the music in which Jikki's songs thrilled each and everyone.

During the filming of "Maheshwari" AM Raja and Jikki became intimate and married subsequently.

To quote some of her best-"Panditlo Pellavatunnadi", "Ekantamo Sayantramo", "Ghallu Ghallu Gajjala Sangeetam", "Jeevitame Saphalamo"-- etc. Music composers used to treat her a little bit higher than LataMangeshkar in those days. She used to sing any song to suit to the voice of the particular artist and Anjali Devi's was a best example in this context.

She toured London, Germany, France and Switzerland to entertain with her sweet and rare voice.

She was honoured by Madras Kala Sagar with "Ugadi Puraskaram" and Govt. of Tamilnadu awarded her "Kalai Ma Mani".

After a long recess Andhras were blessed to hear her voice again in "Aditya 369" with the song "Janavule Nerajanavule"

Quelle -
http://www.niharonline.com/tolly/oldgold.php

வாலிப வயதும் பாலியலும்-2

இர.அருள் குமரன்

நான் நினைக்கிறேன், மரத்தின் வேர் மண்ணில் இருப்பதுபோல் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேர் மனதினில் புதைந்திருக்கிறது. பாலியல் பிரச்சனைகளிலும் முதலில் அடிபடுவதும், அதிகம் காயப்படுவதும், ஆறாத்தழும்புகள் அடைவதும் மனதுதான், எனவே உளவியல் ரீதியாக இப்பிரச்சனையை அணுகுவது பலன் தரும்.

ஆரம்பம் எங்கே இருக்கிறது?
பாகுபாடு பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம், இதற்கும்தான். நீ ஆண், நீ பெண், நீ இன்னது செய்யலாம், இன்னது செய்யக்கூடாது என்று வரையறுக்கும்போது நாம் சில தவறுகள் செய்துவிடுகிறோம். சில உதாரணங்கள்

"அடேய் ராமு! விளையாட்டுல அடிபட்றது சகஜம், அதுக்காக ஏன் பொட்டச்சி மாதிரி அழறே!"


"பொண் குழந்தையா லட்சணமா கூடத்தில மாலுவோட விளையாடவேண்டியதுதானே? அந்த தடியன்களோட என்னடி பேச்சு?"

இந்தியாவின் சமூக அமைப்பில், பொதுவாக சிறுவர்களும் சிறுமிகளும் கலந்துபழக வாய்ப்புகள் குறைவு.

இத்தகைய சூழலில் சகோதரி, அம்மா தவிர பிற பெண்களுடன் பழகாத சிறுவன் இளைஞனாகி உள்ளுக்குள் மாற்றங்கள் அடையும்போது எதிர்ப்படும் பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்க வாய்ப்புக்கள் அதிகம்.

பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆண் வழிமறித்து சாதாரணமாக பேசத்துவங்கினாலே அநியாயத்துக்கு நடுக்கம் வருகிறது, அவளின் பயம் அவனுக்கு ஊக்கம் தருகிறது. இயல்பாக பதிலளித்து சென்றால் அவனே அவளின் நண்பனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும், அவனுடைய நோக்கம் சரியானதல்ல என்றால் அவனிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவளுக்கு தெரிவதில்லை. இவ்வகைப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாகும்போது அதை தாங்கமுடியாமல் தன் தவறாகவும் நினைத்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். இத்தகைய சுழலில் பெற்றோர் தங்கள் பொறுப்புணர்ந்து அவளின் மனநிலை புரிந்து ஆறுதலாக செயல்படவேண்டும்.

ஒரு பருவப்பெண், அல்லது இளைஞனோ தன் எதிர்பாலரோடு நட்புடனிருப்பதை பெற்றோர் என்ற முறையில் நீங்கள் எதிர்ப்பதானால் வலுவான, நியாயமான காரணங்களை முன்வையுங்கள், கட்டாயம் அவர்கள் ஏற்பார்கள், அதை விடுத்து அவர்களை சிறுவர்களாகவே நடத்தினால் அவர்கள் சீர்தூக்கிப்பார்க்கும்போது நீங்கள் அடிபட்டுப்போய்விடுவீர்கள்.

வதந்திகளுக்கு ஒலிபரப்பு நிலையமாக ஒருபோதும் செயல்படாதீர்கள். சில உதாரணங்கள்

"டீ வசந்தி, நம்ம எதித்தவீட்டுப்பொண்ணு காரக்டர் சரியில்லேன்னு அப்பவே சொன்னேனே, நீதான் நம்பலை! இன்னிக்கு பஸ்ல வரச்சே பார்க்குல பாத்துட்டேன் அவளை, எவனோ ஒரு தடியனோட"

அந்த தடியன் அவள் அண்ணனாகவே கூட இருந்திருக்கலாம் அவர்களுக்கு அதை கவனிக்க அவசியமோ நேரமோ ஏது? சுவாரஸ்யமாக சொல்வதற்கு தேவையான விஷயம் ஏற்கனவே கிடைத்துவிட்டதே!

"அந்த மேனேஜரும் புது டைப்பிஸ்டும், இவ்ளோ நேரமா ரூமுக்குள்ள என்னடா பண்றாங்க! ஆபீஸ் வேலை பாக்கறாங்கன்னு என்னை நம்பச்சொல்றியா! ஒரு பார்வைலேயே சொல்லீடுவேன் மச்சி, பட்சி என்ன டைப்புன்னு"

இப்படி ஒரு கண்ணோட்டதில் நம் வாரிசுகளைப்பார்த்தாலும் எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.

வாரிசுகளிடம் பேசும்போது நம்முடைய அலுவலக அழுத்தத்தை, பிற பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு பேசவேண்டும் அதைவிட முக்கியமாக அவர்கள் சொல்வதை கவனித்து கேட்கவேண்டும். அவர்களிடம் பேசும் போது தகப்பன்/தாய் என்ற உயர்ந்த பீடத்தில் அமராமல் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து பேசுங்கள், நாமும் அவர்கள் வயதை கடந்துதான் வந்திருக்கிறோம். நாம் கடந்துவந்த பாதையை சமயமறிந்து பகிர்ந்துகொண்டால் நம் தவறுகளில் கூட அவர்கள் கற்பார்கள்.

இது இப்படியிருக்க நவின நகர்புறங்களிலும், வெளிநாடுகளிலும் வேறு மாதிரி சூழல், அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம்

அது அடுத்து...



nantri - உள்ளத்து ஓசை

Samstag, August 07, 2004

வாலிப வயதும் பாலியலும் - 1

- இர.அருள் குமரன் -

ஏற்கனவே பாலியல் வன்முறை பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். இப்போது வரிசையாக என்னைத்தூண்டும் வண்ணம் சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்காலப்பெண்பாற்கவிஞர்கள் தங்கள் பாலுறுப்புப்பற்றி எழுதுவது பற்றிய இழையில் மதுரபாரதி, யோனி என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் எழுத இயலாத இந்த ஆங்கிலக் கதையைப்பற்றி குறிப்பிட்டார்.

பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் "பதின்ம வயதினரின் பாலியல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்கும் விதம்" எனும் பயிற்சிப்பட்டறை குறித்த விளம்பரம் பார்த்தேன். இரண்டு நாட்களில் வெவ்வேறு சமூகக்கூடங்களில் நடைபெற்ற அந்நிகழ்சியின் முதல் நாள் ஏற்கனவே கடந்துவிட்டது. இரண்டாம் நாளான ஞாயிறு அன்று நான் நேரில் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கீழே தொகுத்திருக்கிறேன்.

முதலில் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான 'குரு பார்வை' எனும் தொடரிலிருந்து பட்டறைக்கு தொடர்புடைய காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது. அந்ததொடரை நான் ஏற்கனவே சிலவாரங்கள் பார்த்திருக்கிறேன், ஆசிரியர் மாணவர் உறவில் எழக்கூடிய சிக்கல்களை வெகு அழகாக படம்பிடித்திருக்கிறார்கள்.

கட்டுப்பாடற்ற பதின்ம வயதுப்பெண் இணையத்தில் முகந்தெரியாத நபருடன் அளவளாவி நேரில் சென்று சிக்குதல், இளையர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் போன்ற விஷயங்கள் திரையிலோடின. இதில் நடித்தவர்களும் நேரில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இளையர்கள் சில நிகழ்வுகளை மேடையில் நடித்துக்காட்டினர், இரண்டு மூத்த(அகவை அல்ல!) சமூக சேவகிகள் நிகழ்ச்சியை வழிநடத்தினர். அதிக ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்து படைக்கப்பட்ட நிகழ்சியில் வலியுறுத்தப்பட்ட கருத்தின் சாரம் பின்வருமாறு

பெற்றோர்களுக்கான அறிவுரைகள்:
நம் பதின்ம வயதுப்பிள்ளைகளுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல்
  • உங்கள் குழந்தைகள் வாழும் உலகை தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் என்ன அழுத்தம் உணர்கிறார்கள்? எதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்? நாம் அவர்களின் செயல்களிலும், நண்பர்களிடமும் ஆர்வம் காட்டினால், அவர்கள் நம் அக்கறையையும், அவர்கள் வாழ்வில் நம் பங்கையும் உணர்வார்கள்.

  • நல்ல உதாரணங்களை ஏற்படுத்தி, நன்மதிப்பு எவ்வாறு நம் வாழ்வை செழிப்பாக்குகிறது என்று உணர்த்துங்கள்.


  • பிள்ளைகளின் உதவிக்கும் தேவைக்கும் நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துங்கள், நம் யோசனைகளையும் கருத்துக்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

  • அவர்கள் உங்களை கேட்காவிடிலும் நீங்கள் அவர்களை கேள்வி கேளுங்கள், அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பது குறித்து கேளுங்கள்.

  • அறிவுரை சொல்ல வாய்க்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நண்பரின் கர்பம், உலவும் வதந்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை உங்கள் பேச்சை துவங்க உதவலாம்.

  • உங்கள் உணர்வுகளிலும் மதிப்பீடுகளிலும் தெளிவாக இருங்கள். பதின்மவயது பிள்ளைகளிடம் பேசும் முன்பே, என்ன பேசவேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். நம் துணை(வர்/வி), நண்பர், அல்லது நம் நம்பிக்கைக்குரிய நபரிடம் இது குறித்து உரையாடுவது நம் சேதியை தெளிவாக்கிக்கொள்ள உதவும். அது பிள்ளைகளிடம் பேசுவதற்கு தேவைப்படும் நம்பிக்கையையும் வழங்கும்.


கவனிக்க வேண்டியவை:

  • உங்கள் பிள்ளைகளின் தன்மதிப்பை வளர்த்துவிடுங்கள். அவர்களின் திறமைகள், குணாதிசயங்கள், சாதனை ஆகியவற்றுக்கு மதிப்புக்கொடுங்கள்.


  • அவர்கள் இயல்பாகவே இருப்பதை மறு உறுதிப்படுத்துங்கள்.


  • நம்முடைய உடலசைவுகள், முகபாவனை, நயம், குரல் ஆகியவை நாம் சொல்லும் சொல்லுக்கு துணை நிற்கட்டும்.


  • தெளிவான, நேர்மையான, சுலபமாக புரியக்கூடிய சிறிய பதில்களை அளியுங்கள்.


  • பகிர்ந்துகொள்ளும்போது காட்சிகளையும் நிறங்களையும் பயன்படுத்துங்கள்.


  • அவர்களின் தவறுகளை கற்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துங்கள். குறைகூறுவது, திட்டுவது, புத்திமதி கூறுவது, கத்துவது இவை அவர்கள் கற்க உதவாது.


பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் குறிப்புகள்:

  • கேள்விகளை உள்ளர்த்தம் கற்பிக்காது ஏற்றுக்கொள்ளுங்கள், உதாரணத்துக்கு 'எத்தனை வயதில் பாலியல் உறவுகொள்ளமுடியும்?' என்ற கேள்விக்கு 'நான் உடலுறவு கொள்வது பற்றி சிந்திக்கிறேன், அதற்கு என்ன செய்யவேண்டும்?' என்று அர்த்தமல்ல, பாலியல் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் குடும்பத்தின் மதிப்பை உணரவே முயற்சிக்கின்றன.


  • இது குறித்து பேசுவது சங்கடமாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.


  • பாலுறுப்புகள், பாலியல் ரீதியான செயல்கள் ஆகியவற்றை அவற்றின் சரியான பெயர்களால் குறிப்பிடுங்கள். சங்கடமாக இருந்தால் அப்பெயர்களை உரக்க சொல்லி அல்லது கண்ணாடி முன் சொல்லி பழகுங்கள் (சொந்த எச்சரிக்கை: உரக்கச்சொல்வது என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்குமளவு உரத்து அல்ல, கண்ணாடி முன் சொல்லும்போதும் கேட்கும் தூரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது உங்களின் மறுபாதியிடம் முன்பே செய்யப்போவதை சொல்லி விடுங்கள் இல்லாவிட்டால் அதி தர்மசங்கடமான நிலை ஏற்படலாம்)


  • கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தெரியாது என்றால் ஒப்புக்கொள்ளுங்கள், பின்னர் அவர்களுக்கு விடையை புத்தகத்திலோ வேறு வகையிலோ தேட நாமே உதவலாம்.


  • எல்லா விபரங்களையும் ஒரே நேரத்தில் வழங்கவேண்டியதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.


  • அவர்களின் அந்தரங்கத்தையும் நம்முடையதைப்போலவே மதியுங்கள். தேவைக்கதிகமாக மூக்கை நுழைக்காதீர்கள்


மற்றபடி (அனைவரும் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் தொகுப்பு)

  • இணைய இணைப்பு உள்ள கணினியை தனிமையற்ற, கண்காணிக்க உகந்த கூடம் போன்ற இடங்களில் வைத்துவிடுவது உத்தமம்.


  • உங்களின் ஒழுக்கததைப்பேணுங்கள், நடு இரவில் தந்தை பார்க்கும் நீலப்படம் மூலமாக தூண்டப்பட்ட குழந்தைகள் உண்டு


  • பதின்ம வயதினரிடம் நிறைய சக்தி இருக்கிறது, அவற்றை செலவழிக்க உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளைக்கொடுங்கள் அவர்களை நடனம், விளையாட்டு முதலியவற்றில் ஈடுபடத்தூண்டுங்கள். வேலையில்லாதவன் மூளை சாத்தானின் பட்டறை.


  • பதின்ம வயதினரை அதி நவீன ஆடை அலங்காரப்பிரியர்கள்(இதிலே பல குழுக்கள் உண்டு),அடங்காதவர்கள், படிப்பாளிகள் என்று பிரிவுகளாக பிரிக்கலாம். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது, படிப்பாளிகள் கண்டதையும் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது


  • அழகான/களையான எதிர் பாலரைப்பார்க்கும் போது மனதுக்குள்ளாவது ஒரு விமரசனம் வரவேண்டும் அப்போதுதான் இயல்பாக இருப்பதாக அர்த்தம் (இதுவும் அடுத்த மூன்று கருத்துக்களும் மருத்துவ ஆலோசகருடைது)


  • சுய தீண்டல், ஈரக்கனவு போன்றவை இயல்பானது, அதன் அளவை மீறினால்தான் ஆபத்து


  • தன்னுடைய பாலுறுப்பில் அடிக்கடி கையை வைத்திருப்பவர்கள் எல்லோரும் சுயதீண்டல் தான் செய்கிறார்கள் என்று அர்த்தமல்ல, சிலருக்கு அங்கே ஏற்பட்டுள்ள வியாதியும் அதனால் ஏற்படும் அரிப்பும் காரணமாக இருந்திருக்கிறது


  • ஒரு பன்னிரண்டு வயதுப்பெண் கர்ப்பமானது தெரியாமலே ஆனால், ஆறுமாத கர்பத்துடன் சொன்னாள் "டாக்டர் என் வயித்துக்குள்ள ஃபுட்பால் இருக்கு". இப்படியும் இருக்கிறார்கள்


  • இந்த பாலியல் விவகாரமெல்லாம் என் குழந்தைக்கு தேவையில்லை என்று விட்டுவிடாதீர்கள் நீங்கள் சொல்லாததால் அவர்களுக்கு தெரியாமல் போகாது, நீங்களே சொன்னால் தவறான தகவல்கள் அவர்களுக்கு கிடைப்பதை தடுக்கலாம்


  • என்னுடைய நண்பன் விந்து வெளியாவதற்கு முன்பே வெளியே வெளியே எடுத்துவிடுகிறான் அதனால் நான் கர்ப்பமாகமாட்டேன் என்று நினைப்பது தவறு ஏனெனில் நாம் உணராமலே, அடையாளம் இல்லாமலே, முன்னரே விந்து உட்செல்ல வாய்ப்பு இருக்கிறது.


  • முதல் முதலாக உடலுறவு கொள்ளும்போது கர்ப்பமாகாது என்பதும் உண்மையல்ல.


  • கர்பத்தை தவிர்க்க உபயோகிக்கும் ஆணுறை போன்ற சாதனங்கள், மாத்திரைகள் நூறு சதம் பலனளிக்கும் என்று கூறமுடியாது. பல சந்தர்ப்பக்களில் அவற்றின் தோல்வி நிறுபணமாகியுள்ளது.


  • சந்தர்ப்பங்களில் எதிர் பாலர் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆயுதம், "நீ என்னை விரும்புவது உண்மையானால் இதற்கு சம்மதி", "நான் உன்னோடு மட்டுமே உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்", "நாம் அனைவரும் நண்பர்கள் நம்முள் இந்தமாதிரி தேவையற்ற தயக்கங்களும் ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது", இது போன்ற உணர்வுப்பூர்வமான அச்சுறுத்துதல்களுக்கு எப்படி மயங்காமல்/தயங்காமல் பதிலளிப்பது என்று அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்.


  • கைகளை வணக்கம் வைப்பது போல உயரத்தூக்குங்கள் அங்கிருந்து மடக்காமல் தொடைவரை கீழிறக்குங்கள், இடைப்பட்ட பகுதி முழுவதும் அந்நியர் தீண்டக்கூடாத பகுதி (பாலுறுப்புகள் மொத்தமும் இதற்குள் அடங்கும்) என்பதை சொல்லி தவறான தீண்டலை அடையாளம் காட்டுங்கள்.


  • குழந்தைகளிடையே பால் அடிப்படியில் வேறுபாடு காட்டாதீர்கள், உதாரணத்துக்கு "அவுரு எல்லாம் நல்லாத்தான் படிக்கிறாரு, இவதான் சரியில்லை" இங்கே 'அவுரு' இளைய மகன், 'இவ' மூத்த மகள்.


  • ஒரு பெண் பருவம் அடையும் போது நாம் அதை விழாவாக கொண்டாடவும் செய்கிறோம், அதே நேரத்தில் அசுத்தம் என்கிறோம். இது அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முறையாக அவளிடம் நிகழ்வதை விளக்குங்கள்


  • அவர்கள் பருவம் அடையும் போது ஏற்படும் மாற்றங்கள், வியர்வை/உடல் நாற்றம் போன்றவை அவர்கள் மனதை பாதிக்காமல் பாத்துக்கொள்ளுங்கள், நாற்றம் நீக்கும் வாசனைத்திரவியங்கள் போன்றவற்றை உபயோகிக்க சொல்லிக் கொடுங்கள், எக்காரணம் கொண்டும் அருவருப்பு காட்டாதீர்கள்.

- இர.அருள் குமரன் -

நன்றி - உள்ளத்து ஓசை