Montag, Mai 31, 2004

என் எழுத்து: சில எண்ணங்கள்

வெங்கடேஷின் மடல் இதழ் 8 இலிருந்து

I.
உங்களை பயமுறுத்துவது என் நோக்கமல்ல. ஆனால், உள்ளபடி, நான் அநுபவிக்கும், அநுபவித்த அவஸ்தைகளைப் பகிர்ந்துகொள்வவே இதை எழுதுகிறேன்.

பல நாள் கதை எழுதவே முடிந்ததில்லை. தினசரி காலையில் கணினி முன் ஒற்றைக்கால் தவம் மாதிரி உட்கார்ந்துகொண்டே இருப்பேன். அஞ்சல்களைப் பார்ப்பேன். மற்றவர்கள் எழுதுவதைப் படிப்பேன். பதில் போடத் தோன்றினால் பதில். அப்புறம், அவசரமாய் எழுதவேண்டிய கட்டுரைகள் ஞாபகம் வரும். கொஞ்சம் இணையத்தில் மேய்ந்து, அடிப்படைச் சரக்குகளை சேகரித்துக்கொண்டு, கட்டுரை எழுதுதல்.

முன்னரே எழுதத் தொடங்கி 2 கேபி, 3 கேபி, 5 கேபி, 6 கேபி ரேஞ்சுகளில் பல கதைகள் எனது 'முடிக்கவேண்டும்' என்ற கோப்பில் காத்திருக்கும். ஒவ்வொன்றாய் மீண்டும் எடுத்துப் படித்துப் பார்ப்பேன். எழுதத் தொடங்கிய போது இருந்த மனநிலை இப்போது படிக்கும்போது இருக்காது. சுவாரசியம் கூடாது. அப்படியே அப்படியே மூடி வைத்துவிடுவேன். பல சமயங்களில் இந்தப் பழைய கதைகளைப் படிப்பதைவிட, புதிதாக எழுதலாம் என்று தோன்றிவிடும். அப்படியே ரம்பிக்கவும் செய்வேன். எண்ணி 30வது வரியில் ஒரு அசுவாரசியம் ஏற்பட்டுவிடும். நிறுத்தி வைத்துவிட்டு, யோசிக்கத் தொடங்கிவிடுவேன்.

கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன். காலாற நடந்து போகும் எல்லா சமயங்களிலும் ஏதேனும் ஒரு கதை என்னுள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்த யோசனையை அப்படியே எழுத்தில் வடித்து தரும் இயந்திரம் ஏதேனும் இருக்குமானால் எவ்வளவு செளகரியம் என்று நினைத்துக்கொள்வேன்.

90களில் எனக்குப் பெரும் மனஎழுச்சி இருந்ததுண்டு. மூன்று மணிநேரத்தில் ஒரு சிறுகதை எழுதிவிடும் லாவகம் கைகூடியிருந்தது. எனது பெருங்கூட்டத்தில் ஒருவன், கரைந்தவர்கள் தொகுதியில் உள்ள பல கதைகள் இப்படி எழுதப்பட்டனதாம். மனஎழுச்சி அடங்குவதற்குள் சிறுகதை எழுதி முடிக்கப்பட்டிருக்கும். சுத்தமாக. ஒன்றிரண்டு அடித்தல் திருத்தல்களுடன். பெரும்பாலும் இரண்டாம் படி எழுதுவதில்லை. முதல் படியையே பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறேன். ஒரு போட்டோ காப்பி மட்டும் எடுத்து வைத்துக்கொள்வேன்.

கதை எங்கிருந்து தொடங்கும் என்று என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ஏதோ ஒரு சம்பவமோ, கருத்தோ, எண்ணமோ கதையை எழுதத் தொடங்கும். கணினியில் எழுத உட்காரும் போது, முதல் வரி எப்படி வந்துவிழும் என்று இதுவரை தெரியாது. எழுத எழுதத்தான் பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுதல், அவர்களின் குணாதிசயங்களை வரையறுத்தல், வாழும் சூழலை நிர்ணயித்தல் போன்றவை நடைபெறும். எழுதும் முன், ஒருமாதிரி இப்படியாகக் கதை எழுத வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அதற்கான முடிவையும் யோசித்து வைத்திருப்பேன்.

எழுதத் தொடங்கியபின், முடிவு என் கையில் இல்லை. யோசிக்கும் வேகத்தில் தட்டச்சு செய்ய முடியுமென்பதால், யோசனை நினைத்தறியா திசைகளில் பாயத் தொடங்கும். யோசித்தே இராத பல சூட்சுமங்கள் கதையில் தானே வந்து சிக்கிக்கொள்ளும். வளர்ந்துகொள்ளும். சம்பவங்களும் உரையாடலும் கூட தானே பொருத்தமான இடங்களில் அமைந்துகொள்ளும். உரையாடலைத் தவிர்த்தே நான் எழுத முயற்சிப்பேன்.

பல சமயங்களில் உரையாடல், கதையின் அழுத்தத்தைக் குறைத்துவிடுமோ என்ற தயக்கம் எனக்கு உண்டு. உரையாடலை மிக வலுவாகப் பயன்படுத்துபவர் என்ற நான் நம்புவது இந்திரா பார்த்தசாரதியைத்தான். பலர் உரையாடலில் சறுக்கிவிடுவார்கள். கதை அங்கே தேங்கிவிடும். அல்லது நீட்டி முழுக்கி, எந்தப் பயனும் இல்லாமல் தொணதொணக்கும். இதைத் தவிர்க்க நான் ரம்பத்தில் இருந்து கவனமாக ஒரு உத்தியைப் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் தேவைப்படும் தருணத்தில் என் பாத்திரங்கள் சட்டென இரண்டு மூன்று வரிகள் பேசுவார்கள். முடிக்க மாட்டார்கள். உரையாடலைத் தொடர்ந்து வரும் பகுதி அதை முடித்து மேற்கொண்டு செல்லும்.

ஒரு வகையில் அழுத்தத்தைத் தொடர்வதற்கு இது நல்ல உபாயம்.

கதையில் உணர்வுதான் எனக்குப் பிரதானம். உணர்வு பெரும்பாலும் ஒரு ஊடாட்டத்தின் ஊடேதான் இருக்கும். ஒன்றைச் செய்யலாமா வேண்டாமா என்பது எவ்வளவு பெரிய குழப்பம் என்பது யோசித்துப் பார்த்தால் தெரியும். என் கதைகள் முழுவதும், இந்த ஊடாட்டமும், கேள்விகளும்தான் பின்னிப் பிணைந்து வரும். கீழ் மத்திய தர வாழ்வில் இந்தக் குழப்பத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தக் குழப்பத்தையே வரிகளில் நீட்டித்துக்கொண்டு போகலாம். அழுத்தம் கூடும்.

மற்றொன்று மெளனம். இதில் எனக்கு வாத்தியார் அசோகமித்திரன். ஒரு உதாரணம். ஒரு பாத்திரம் அநுபவிக்கும் துயரத்தை இரண்டு மூன்று விதங்களில் பிரதிபலிக்கலாம். பாத்திரத்தின் மனநிலைக்குள் போய், பிசையும் வேதனையை வார்த்தைகளில் வடிக்கலாம். இப்படியாக வேதனைப்பட்டான், துயரப்பட்டான் என்று வருணித்துக்கொண்டே போகலாம் (இதைத்தான் நமது புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்கள் செய்கிறார்கள்). மூன்றாவது, வேதனைப்படுபவனைச் சுற்றியுள்ள உலகை, அவனது நடவடிக்கைகளை, போக்குகளை வெளியில் இருந்து பார்ப்பது. அவன் மனத்துக்குள் போகாமல், அவனது ரியாக்ஷன்களை மட்டும் பதிவு செய்வது. மற்ற பாணிகளை விட, இதுதான் பயங்கர அழுத்தம் தரக்கூடிய பதிவு. சிந்தாமல் சிதறாமல், அந்த வேதனை என்ற உணர்வு வாசகனைப் போய்ச் சேர, இந்தப் பாணிதான் வெற்றிகரமான பாணி. படித்து
முடிக்கும்போது, மனத்தில் திம்மென ஒரு கனம் இருக்கும். வெற்றிகரமாக உணர்வை வாசகன் மனத்தில் கடத்திவிட்டோம் என்று இதற்கு அர்த்தம்.

பல முக்கியக் கதைகள் இப்படிப்பட்டனதாம். சுந்தர ராமசாமியின் விகாசம், வண்ணதாசனின் குமரேசன் என்பவரும்.., வண்ணநிலவனின் தாமிரபரணிக் கதைகள் தொகுதியில் உள்ள பல கதைகள், கந்தர்வனின் கொம்பன்....

இதையெல்லாம் யோசித்து கான்ஷியஸ்ஸாகச் செய்ய முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. அல்லது என்னால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. இப்படியெல்லாம் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேனே தவிர, எழுதும்போது, என்ன வருகிறதோ அதை அப்படியே வைத்துக்கொள்ளவே விரும்புவேன். மேன்மேலும் செதுக்குகிறேன் பேர்வழி என்று என் மேதாவிலாசத்தை அதில் போட்டுத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

எழுதத் தொடங்கிய 80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் ஒரே கதையை பல படிகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். மேன்மேலும் அதைச் செப்பம் செய்து செய்து மாற்றியிருக்கிறேன். அப்புறம், ஒரு கட்டத்தில் அது தேவையில்லாமல் போய்விட்டது.

II.
இந்தக் கணினி / இணைய நிறுவனமான சி·பிக்கு வந்தபின், எழுதும் பரபரப்பு என்பது முற்றிலும் நீங்கிவிட்டது. என் மனநிலைக்கு ஏற்ப கதைகளை எந்த அழுத்தமோ அவசரமோ இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒருவிதமான மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது. கதை யாருக்காக என்பதில் எனக்கு ஏற்பட்ட மனமாற்றம்தான் இது.

கதை அடுத்தவருக்காகத்தான். அதில் சந்தேகமில்லை. னால், முதலில் அதை நான் ரசிக்க வேண்டும், எழுதுவதை அநுபவிக்க வேண்டும் என்ற பக்குவம் கடந்த சில ண்டுகளாக ஏற்பட்டுவிட்டது. அதனால் கதை எழுதுவதில் மந்தத்தனம் வந்துவிட்டதும் உண்மை. மற்றொரு முக்கிய மாற்றம் பத்திரிகைகள்,பிரசுரம், வெளியீடு தொடர்பாக இருந்த சைகளில் ஏற்பட்ட மாற்றம். முன்பெல்லாம், எனக்கு தர்சம் னந்த விகடன்தான் (இன்றும் சையில்லை என்று சொல்லமாட்டேன்). கல்கியில் நிறைய கதை எழுதினேன். குமுதத்தில் எழுதுவதில் தயக்கம் இருந்ததுண்டு.

ஆனால், விகடன் என்று கனவு. அதில் கதை வரவேண்டும் என்று ரொம்பவும் சை. அங்கே, ரமேஷ் வைத்யா என்றொரு நண்பர் உண்டு. அவரிடம்தான் என் கதைகளைக் கொடுப்பேன். படித்துவிட்டு, நன்றாக இருக்கிறது, னால், எடிட்டோரியல் தான் தீர்மானிக்கணும் என்பார். மூன்று நான்கு மாதத்துக்குள் கதை வெளியாகும். னந்த விகடனுக்குக் கொடுத்த எந்தக் கதையும் திரும்பி வந்ததில்லை. எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எனக்குள் வேறு ஒரு போராட்டம் இருந்துண்டு. அதில் இருந்து விலக விலக நான் நிறைய தெளிந்திருக்கிறேன்.

1. பத்திரிகைக்கேற்ப கதையிருந்தால் தான் பிரசுரிப்பார்கள். இதன் கராலரி,
பிரசுரிப்பதற்கேற்ப கதை எழுதுவது. சிறுபத்திரிகை உலகில் இருந்து வந்த எனக்கு இது இரண்டும் மனத்தில் ஒப்பவில்லை. விகடன், நான் எழுதிய கதைகளை அப்படியே பிரசுரித்தது. ஒரு வார்த்தை கூட மாற்றியதில்லை. இப்போது வேறு மாதிரி சொன்னார்கள், 'கரெக்டா, அவங்களுக்கு ·பிட் கிறா மாதிரி கதை எழுதறீங்க. அதான், அப்படியே போடறாங்க.' பிரச்சினை எங்கே என்று யோசிக்கத் தொடங்கினேன்.

சிறுபத்திரிகை - வெகுஜன பத்திரிகை என்ற பிரிவினை தந்த குழப்பம் இது. வெகுஜன பத்திரிகை எது செய்தாலும் ஏற்கக்கூடாது. அதன் வணிகம், நோக்கம் நல்லிலக்கியத்துக்கு நேர்மாறானது என்று விளக்கம் கூறினார்கள்.

இப்போது நான் எங்கே நிற்கிறேன் என்று யோசித்தேன். என்னைப் பொறுத்தவரை வணிகம் என்றும் தவிர்க்கமுடியாதது. வணிக வெற்றியில்லாமல், எந்த நல்ல விஷயமும் சாத்தியமில்லை. முன்னேற்றமும் சாத்தியமில்லை. வணிக நிறுவனத்துக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரியாதை உண்டு. இடம் உண்டு. விகடன் என்ற பத்திரிகை என் எழுத்தில் தலையிடவில்லை. சொல்லப்போனால், மரியாதையே செய்திருக்கிறது.

2. அடுத்து என்னை நிறுத்திய கேள்வி: நான் எந்த வழியில் வருகிறேன்? நிச்சயம் நான் சிறுபத்திரிகையாளன் இல்லை. அதன் சத்தான பகுதிகள் என்னுள் உண்டு. னால், அதன் மெளடீகங்களுக்கு என்னால் உடன்பட முடியாது. அதே போல், நிச்சயம் நான் வணிக எழுத்தாளனும் இல்லை. என்னால் ஒரு தேவிபாலாவாகவோ, ரமணி சந்திரனாகவோ க முடியாது. கவும் விரும்பவில்லை. இடையே ஒரு வளமான பரம்பரை உண்டு. வணிக இதழ்களில், சமரசம் செய்துகொள்ளாத தமது எழுத்துக்களால் இன்றும் நிலைத்து நிற்கும் தி.ஜா, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, தவன், சுப்பிரமணிய ராஜூ, மாலன் பரம்பரையில் வருபவன் நான்.

நான் எங்கே நிற்கிறேன் என்ற குழப்பம் இப்படித்தான் தீர்ந்தது.

3. எங்கே எழுதினாலும் நான் எப்படி எழுதுகிறேனோ அப்படியேதான் எழுதுகிறேனா? அன்று யோசித்த போதும் சரி, இன்று திரும்பிப் பார்க்கும்போதும், நான் மாறவேயில்லை. நான் எழுதவிரும்பியதை எழுத விரும்பிய வகையில், முறையில் எழுதி வந்திருக்கிறேன். சற்றும் யாருடைய, எதனுடைய அழுத்ததுக்கும் ட்படவில்லை.

இதுபோதும். இதுதான் என் பெரிய பலம். உண்மையில் சொல்கிறேன், நான் தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தது இந்தத் தெளிவு வந்தபின்புதான். ஒப்பியல் நோக்கில், என் தரம் என் சமகாலத்தில் எழுதும் மற்றொருவரோடு வேறுபடவே செய்யும். படிக்கும் ஒவ்வொருவரின் பார்வை சார்ந்து தரம் தரமின்மை
மாறுபடும். அதற்காக நான் கவலைப்பட முடியாது.

இந்த தைரியம் வந்தபின்பு, பிரசுர சை பெருமளவு குறைந்துவிட்டது. விருப்பப்பட்டபடி, எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் பிரதிநிதித்துவப் படுத்தும் கீழ் மத்தியதர சமூகத்தை, எனக்குத் தெரிந் வரையில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறேன். பலருக்குப் பிடித்திருக்கிறது. வேறு பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். நேராக முகத்திற்கு நேரே சொல்லாமல் இருக்கிறார்கள்.

பிடிக்காதவர்கள் குறைசொல்லும்போது ஏற்படும் அதே மனநிலையில்தான், பிடித்தவர்கள் பாராட்டும்போதும் இருக்கிறது. பெரிய வித்தியாசமில்லை.

நேசமுடன்
வெங்கடேஷ்

Dienstag, Mai 18, 2004

ஓடுகிற வண்டியோட... - மீளும் நினைவுகள்

ஈழநாதனின் பதிவிலிருந்து.


கொழும்பு போகும் சனம் ஒல்லித்தேங்காயுடன் பயணம் போனது என்று சொன்னேன்.ஒல்லித்தேங்காய் எதற்கு என்று சொல்லவில்லை.தேங்காயில் இடையிலேயே பழுதடைந்த தேங்காய்கள் அவற்றை மூடியுள்ள தும்புடன் நீரில் போட்டால் நன்கு மிதக்கக் கூடியவை.இப்படியான இரண்டு தேங்காய்களை கயிற்றால் பிணைத்து அவற்றை இடுப்பிலை கட்டி நீந்தப்பழகுறதுக்கு பயன்படுத்துவினம்.ஆமி வந்தவுடனை கடலுக்கை குதிச்சு நீந்தாட்டிலும் மிதக்கிறதுக்காவது பயன்படுமே என்று தான் இவற்றையும் கொண்டு போனவை.

தொடர்ந்த இழப்புகளாலை சனம் கிளாலிப் பாதையென்றாலே ஏதோ யமலோகம் போறமாதிரிப் பயப்படத் தொடங்கீட்டுது.கொழும்பு போற ஆக்களை வழியனுப்ப வாறவை.போறவையை ஏதோ பலிக்களத்துக்குப் போற ஆடுகள் மாதிரிப் பார்த்திச்சினம்.

கிளாலி Mapஇதாலை விடுதலைப்புலிகளுக்கும் பெரும் பிரச்சனையாகப் போச்சுது உவ்வளவு வீரம் காட்டிறியள் உதிலை வாற நேவிக்கு அடிக்கக் காணேலை என்று சனம் நேரடியாகக் கேட்கத் தொடங்கீட்டுது.இந்தப்பிரச்சனையை பாராளுமன்றத்திலை கொண்டு போச்சினம் இரண்டு எம்பிமார்.அதுக்கு அரசங்கம் சொன்ன பதில் ஆனையிறவுப்பாதையாலை ஏ 9 றோட்டாலை சனம் போக விடாமல் புலிகள் இயக்கம் தான் தடுத்து வைச்சிருக்கு,கிளாலிப் பிரதேசம் தடை செய்யப்பட்ட பிரதேசம் எண்டு எண்டு அவையள் போகாத ஊருக்கு வழி சொல்லிச்சினம்.இதுவும் புலிகளுக்கு பெருத்த பிரச்சனையாகப் போச்சுது தாங்கள் களத்திலை இறங்கினாத்தான் சரி என்ற முடிவுக்கு வந்திச்சினம்.அப்ப இவ்வளவு நாளும் புலிகள் பாதுக்காப்புப் குடுக்கேலையோ என்று கேட்பியள் சும்மா இரண்டு படகு அங்கையும் இங்கையும் ஓடித்திரியும் .நேவிட்டையோ அல்லது கெலியிலை வாற ஆமிட்டையிருந்தோ பாதுகாப்பு குடுக்கிற அளவுக்கு அவயிட்டை வசதி இருக்கேலை.இப்ப தவிர்க்க முடியாத கட்டம் வந்தவுடனை கடற்புலிகள் காவலுக்கு வந்திச்சினம்.



சனத்துக்கும் கொஞ்சம் நம்பிக்கை ஏனெண்டா வல்வெட்டித்துறை முல்லைத்தீவு பகுதியளிலை கொஞ்ச நாள்களுக்கு முதல்தான் நேவிக்கப்பல்கள் கடற்புலியளிட்டை அடிவாங்கியிருந்தவை அதாலை சனம் கடற்புலிகளை நம்பி கிளாலிப்பாதையை பயன்படுத்தத் தொடங்கியது.

நான் முதல் சொன்ன மாதிரி வலுக் கூடிய இயந்திரங்கள் பூட்டப்பட்டு ஒன்றோடை ஒண்டு கட்டப்பட்டு படகுகள் பயணம் போகத் தொடங்கிச்சுது.வழியடையாளம் ஓலைகள்.கடற்புலிகளின்ரை படகுகள் ரோந்து போகத் தொடங்கிச்சினம்.புலியளின்றை படகுகள் களத்திலை இறங்கின உடனை அதுவே ஆமிக்கும் வாய்ப்பாப் போச்சுது ஏனென்டா கடற்புலியளிட்டை இருக்கிற பெரிய படகுகள் ஆழம் குறைஞ்ச பகுதியிலை போக மாட்டுது ஆனால் நேவி வைச்சிருந்த வோட்டர் ஜெற் எண்டு சொல்லுற அதிவேகப்படகுகள் ஒரு அடி ஆழத்தண்ணிக்குள்ளையும் போகும்.இதாலை நிலமையைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தி காவலுக்கு வரும் கடற்புலியளை அழிக்கவும் போக்குவரத்து செய்யுற பொதுமக்களை சாட்டோடை சாட்டா கொன்று தள்ளவும் நேவி முயன்றுது.


கிளாலிப் பாதை இரண்டு பக்கமும் தங்கடை பலத்தை பரீட்சை செய்து பார்க்கிற களமா மாறிப் போச்சுது தினம் தினம் சண்டைதான்.இரவு 8 மணியளவிலை புலியளின்ரை படகுகள் உலாப்போகும் போய் நேவி தென்படவில்லை என்ற உடனை ஒரு தொகுதி பொதுமக்களின்ரை படகுகள் போகும்.இது பூநகரியிலையும் ஆனையிறவிலையும் இருக்கிற நேவியின்ரை ராடரிலை தெரிந்தவுடனை நேவிப்படகுகள் தயாராகும் சனத்தின்ரை படகுகள் கடல் மத்திக்கு வரும் வரை பார்த்திருந்து விட்டு நேவிப்படகுகள் பாய்ந்துவரும் பிறகென்ன கடற்புலியளின்ரை படகுகள் துரத்தும் இவர்கள் ஓட அவர்கள் கலைக்க அவர்கள் ஓட இவர்கள் கலைக்க கிளாலி அல்லோலகல்லோலப்படும்.சனம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு பயணம் போகும்.இப்பிடி சண்டைக்கு இடையிலை அம்பிட்டு கொஞ்சப்பேர் செத்துப் போனார்கள்.சண்டையிலை தங்களுக்குத் தோவியெண்டா ஆனையிறவிலையிருந்தும் மண்டைதீவிலையிருந்தும் கிளாலிக்கு ஷெல் அடிப்பாங்கள் அதிலையும் கொஞ்சம் காயப்பட்டும் செத்தும் போனது.

இப்படியாக வெறுமனே போய் வாற பாதைக்குக் கூட தைழ்ச் சனம் நிறைய விலை குடுக்கவேண்டியிருந்தது.அக்கரையிலும் இக்கரையிலும் இருக்கிற உறவுகளை இணைக்கும் ஒரே வழியான கிளாலியே சிலவேளைகளில் உறவுகளை நிரந்தரமாகப் பிரித்துவிடும் இடமாகவும் மாறியது.அப்பா வியாபார நிமித்தம் அடிக்கடி கொழும்பு போவார் நான் மோட்டார் சைக்கிளில் ஏத்திக் கொண்டு போய் கிளாலியின் இக்கரையில் விடுவேன்.அப்போது ஊரடங்கு எதுவும் இல்லை அதாலை நடு இரவிலையும் திரும்பிப் போகலாம் நான் போகமாட்டன்.இப்படிப்பட்ட பாதையாளை அப்பாவை விட்டுவிட்டு எப்படி நான் மட்டும் நிம்மதியாக வீடு போக முடியும் வீட்டில் அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தை விடியும் வரை பார்த்துக் கொண்டிருப்பதைவிட கிளாலியின் இக்கரையில் இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதாகப் பட்டது.அதைவிட முக்கியமான ஒன்று அன்று இரவு எந்தவித அசம்பாவிதமும் நடக்கேலையெண்டா அப்பா நல்லபடி அக்கரை போய்ச்சேர்ந்திட்டார் என்று அர்த்தம் அந்த நல்ல சேதியை விடிந்தவுடனை ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி அம்மாவின் முகத்திலை தோன்றும் நிம்மதியைப் பார்ப்பது என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

இந்த நேரத்திலை எனக்கு நிறைய கடற்புலி அண்ணாமார் பழக்கமாய்ச்சினம்.என்ன அண்ணாமார் என்று சொல்கிறேன் என்று பார்த்தீர்களா அப்போதுதான் எனக்கு 12 வயது 12 வயதில் எப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டலாம் என்றெல்லாம் கேட்கவேண்டாம் ஏனென்றால் நான் அதை 10 வயதிலை இருந்தே ஓட்டத் தொடங்கீட்டன் லைசென்ஸ் என்றெதுவும் யாழ்ப்பாணத்தில் தேவைப்படவில்லை.

தங்களுடைய வலுக்குறைந்த படகுகளுடனும் ஆயுதங்களுடனும் படையினரைச் சமாளிக்க முடியாது என்பது தெரிந்தபோது கடற்புலிகளால் களத்தில் இறக்கப்பட்டவர்களே கடற்கரும்புலிகள் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவினர்.கரும்புலிகள் என அழைக்கப்படும் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவினர் கடற்புலிகளுடன் சேர்ந்து மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் இறங்கினர்.இவர்கள் வெடி மருந்து நிரப்பப்பட்ட சிறு படகுகளை ஓட்டியபடி கிளாலிக் கடற்பரப்பில் வலம்வந்தனர் இலங்கை இராணுவத்தின் கடற்படைக் கலங்கள் சண்டைக்கு வந்ததும் இவர்கள் தங்களது வெடிமருந்து நிரப்பப்பட்ட படகுகளைக் கொண்டுபோய் அவர்களது படகுகள் மீது மோதி வெடித்தனர்.இதனால் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நடமாட்டம் குறைந்தது.மக்களும் புலிகளும் வெடிமருந்து நிக்கப்பட்ட இப்படகுகளை "இடியன்கள்" என அழைத்தனர் பெயரைக் கேட்டாலே சிறீலங்கா நேவிக்கலங்கள் ஓடுமளவுக்கு பயங்கரம் நிறைந்தவை இந்த "இடியன்கள்".கிளாலியின்ரை இக்கரையிலை நிக்கிற சனம் நேவி பற்றிக் கதை வரும்போது இண்டைக்கு "இடியன்கள் "உலாவுது பயமில்லை அவங்கள் ஆமியை பார்த்துக் கொள்ளுவாங்கள் என்று கதைப்பதை கேட்டிருக்கிறேன்

வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து அக்காலத்தில் இடம்பெயர்ந்த எவரும் தம்மைப் பாதுகாப்பாக வழியனுப்புவதற்கு தம்முயிரைக் கொடுத்த இந்த "இடியன்களை" மறந்திருக்கமாட்டார்கள்.விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் என அழைக்கப்படும் தற்கொலைப்படையைப் பற்றிப் பலரும் பலவிதக் கருத்துகளையும் விமர்சனங்களையும் சொல்லும்போது நான் நினைத்துக் கொள்ளும் ஒரு முகம் இந்த "இடியன்களில்" ஒன்று நான் கும்பிடுற தெய்வம் தான் காப்பாத்திச்சுது என்று சொல்லும் ஒவ்வொருத்தரும் இந்த இடியனுக்காகவும் ஒருகணம் பிரார்த்த்னை செய்திருப்பர் என்றே நினைக்கிறேன்.

இவர்களை நாம் நேரில் பார்த்திருப்போம் ஆனால் அவர்கள் கரும்புலிகள் எண்டு தெரிஞ்சிருக்காது சாதாரணமா புலியள் மாதிரி திரிவினம்.இரவானா படகெடுத்துக் கொண்டுபோய் இண்டைக்கு நேவி சிக்குமா என்று கடலில் காவலிருப்பார்கள்.இரவில் வெடியோசை கேட்கும் போது யார் பெத்த பிள்ளையோ என்று சொல்லும் வாயோடை கண்ணிலை வழியும் நீரைத்துடைச்சுவிட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.


Posted by Eelanathan at May 16, 2004 11:24 AM

ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-1
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-2
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-3

Donnerstag, Mai 13, 2004

புத்திசாலிச் செருப்பு

adidas_computerized.pngபுத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது செருப்பே புத்திசாலியாகிவிட்டது. நேற்றைக்கு டிஸ்கவரியில் அடிடாஸின் புதிய காலணியைப் பற்றிய விளக்கத்தைப் பார்த்தேன். உலகிலேயே முதன் முறையாக நுண்செயலி பொருத்தப்பட்ட காலணியை அடிடாஸ் வடிவமைத்திருக்கிறது. ஏன் நுண்செயலி ஓடும் பரப்புக்கு ஏற்றபடி (தார் ரோடு, மண் தரை, புல்வெளி) உங்கள் காலின் அழுத்தம் மாறுபடும் அடிடாஸின் இந்தக் காலணியிலிருக்கும் பாலிமர் நுரைப்பஞ்சுகளின் அழுத்தம் மற்றும் தகவுதிறன் முதலாம் அடியில் கணக்கிடப்பட்டு, கால் அடுத்ததாகத் தரையில் பாவுவதற்கு முன்பு மாற்றியமைக்கப்படும். இந்த முறையில் உயவைக் குறைப்பதன்மூலம் பந்தய வீரரின் வேகம் அதிகரிக்கப்படும், கூடவே வீரரின் உடம்பிலிருந்து தரைக்கு மாற்றப்படும் சக்தி குறைவதால் வீரரின் சக்தி விரயம் தடுக்கப்படுகிறது.

adidas_closeup.pngகுதிகால் பகுதியில் இருக்கும் இந்த மிகச் சிறிய எலெக்ட்ரானிக் அமைப்பு தொடர்ச்சியாக பரப்பின் தன்மையையும் அணிபவரின் ஓட்டவீதத்தையும் கணக்கிட்டு தன்னைத் தானே மாற்றியமைத்துக் கொள்கிறது. தற்சமயம் பாவனையாளர்கள் பரப்பின் தன்மைக்கு ஏற்றபடி வேவ்வேறு காலணிகளை மாற்றிக் கொள்கிறார்கள். என்னுடைய அலுவலக நண்பன் கோடை காலத்தில் மிதிவண்டியில் வரும்பொழுது ஒரு காலணியில் வருவான், பின்னர் ஆய்வகத்தில் வேறு, மதிய உணவு இடைவேளையில் விளையாட்டுக் கூடம் போய் உடற்பயிற்சி செய்ய ஒரு காலணி, மாலையில் டென்னிஸ் விளையாட வேறு காலணி, மீண்டும் மிதிவண்டி காலணி என்று மாற்றிக் கொண்டே இருப்பான். இதற்கு முக்கிய காரணம், கடினப்பரப்பில் பாவிக்க ஏற்றபடி செய்யப்பட்ட உடற்பயிற்சி காலணி, புல்தரையில் டென்னிஸ் ஆட ஏற்றதில்லை. ஆனால் அடிடாஸின் இந்தக் காலணி பரப்புக்கு ஏற்றபடி தன்னைத்தானே மாற்றிக் கொள்வதால் எல்லா பரப்புகளிலும் பயன்படும்.

டிஸ்கவரியில் இதை வடிவமைத்த குழுவிலிருந்து ஒருவரை பேட்டி கண்டார்கள். அவரிடம் மூன்றுவருடங்களாக நடந்துவந்த இந்தக் கண்டுபிடிப்புத் திட்டத்தின் முக்கியச் சிக்கல் என்ன என்று கேட்டதற்குப் பொருத்தப்படும் மின்சாதனத்தின் எடையை காலணியின் மொத்த எடையான 400 கிராமிற்குப் பத்தில் ஒரு பங்காக (40 கிராம்) வைத்திருப்பதுதான் என்று சொன்னார்.

விலை அதிகமில்லை. 250 அமெரிக்க டாலர்கள்தான். ஆனால் இந்தக் காலணி பல்வேறு விதமான காலணிகளை வாங்குவதைத் தவிர்ப்பதாலும், தேய்மானத்தைக் குறைத்து நீண்ட நாட்கள் உழைக்க வல்லது என்பதாலும் இதன் விலை பொருத்தமானதாகத்தான் இருக்கும்.

நன்றி - வெங்கட்

Freitag, Mai 07, 2004

மனமுள்

சுமதி ரூபன் குறும்படம் தயாரித்திருக்கிறார் என்பதை சில வாரங்களின் முன் அறிந்த போது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது. எமது சமூகத்தில் பெரும்பாலும் இப்படியான விடயங்கள் ஆண்களுக்கென்றே முத்திரை குத்தி வைக்கப் பட்டுள்ளன. அந்த விதிகளை விலக்கி இன்னும் இன்னும் பெண்கள் இப்படிப் பல்துறைகளிலும் முன்னுக்கு வரவேண்டும்.

சுமதிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இங்கே சுமதி ரூபன் தயாரித்து வழங்கிய குறும்படம்.
மனமுள்

Donnerstag, Mai 06, 2004

இளைஞனின் குறும்பூவிலிருந்து

திரைப்படம்: Power

இந்த இரவு
பெண்களின் துயரம் போல
ஏன் நீள்கிறது?

இந்தப் பனித்துளி
பெண்களின் கண்ணீரைப் போல்
ஏன் சுடுகிறது?

பெண்மையை இருட்டும்
இந்தக் கேள்வி இருட்டை
எப்போது விரட்டப் போகிறாய்?

வா சூரியனே வா வா
இந்த இருட்டின் தலையில்
ஒரு குட்டு வை
ஒரு குட்டு வை

பெண்களின் பாதையில்
புதிய வெளிச்சத்தைக்
கொட்டி வை

நன்றி - இளைஞனின் குறும்பூ