Mittwoch, Juli 28, 2004

Sag mir ein gutes Wort

Sag mir ein gutes Wort,
bevor du gehst vom Hause fort,
Es kann so viel am Tag gescheh´n,
wer weiss, ob wir uns weiderseh´n

இன்றைய யேர்மனியத் தினசரிப் பத்திரிகையொன்றில் மரணஅறிவித்தல் பக்கத்தில்
எதிர்பாரத விதமாக இறந்து போன 49 வயதுக் கணவனின் மரணத்தை அறிவித்ததோடு, இதையும் அவர் மனைவி எழுதியுள்ளார்.
இது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு கவிதையாக இருக்கலாம்.
ஆனால் என் மனதைத் தொட்டது.

மரணக் கவலையின்றி...!

இறந்து கொண்டிருக்கிறது
நேற்று உதிர்ந்த மல்லிகை...
இருந்தும்
மணந்து கொண்டிருக்கிறது,
மரணக் கவலையின்றி...!

உயரங்களின் ரசிகன்
ரமேஷ் வைத்யா


nanatri-nesamudan venkatesh