Montag, Mai 31, 2004

என் எழுத்து: சில எண்ணங்கள்

வெங்கடேஷின் மடல் இதழ் 8 இலிருந்து

I.
உங்களை பயமுறுத்துவது என் நோக்கமல்ல. ஆனால், உள்ளபடி, நான் அநுபவிக்கும், அநுபவித்த அவஸ்தைகளைப் பகிர்ந்துகொள்வவே இதை எழுதுகிறேன்.

பல நாள் கதை எழுதவே முடிந்ததில்லை. தினசரி காலையில் கணினி முன் ஒற்றைக்கால் தவம் மாதிரி உட்கார்ந்துகொண்டே இருப்பேன். அஞ்சல்களைப் பார்ப்பேன். மற்றவர்கள் எழுதுவதைப் படிப்பேன். பதில் போடத் தோன்றினால் பதில். அப்புறம், அவசரமாய் எழுதவேண்டிய கட்டுரைகள் ஞாபகம் வரும். கொஞ்சம் இணையத்தில் மேய்ந்து, அடிப்படைச் சரக்குகளை சேகரித்துக்கொண்டு, கட்டுரை எழுதுதல்.

முன்னரே எழுதத் தொடங்கி 2 கேபி, 3 கேபி, 5 கேபி, 6 கேபி ரேஞ்சுகளில் பல கதைகள் எனது 'முடிக்கவேண்டும்' என்ற கோப்பில் காத்திருக்கும். ஒவ்வொன்றாய் மீண்டும் எடுத்துப் படித்துப் பார்ப்பேன். எழுதத் தொடங்கிய போது இருந்த மனநிலை இப்போது படிக்கும்போது இருக்காது. சுவாரசியம் கூடாது. அப்படியே அப்படியே மூடி வைத்துவிடுவேன். பல சமயங்களில் இந்தப் பழைய கதைகளைப் படிப்பதைவிட, புதிதாக எழுதலாம் என்று தோன்றிவிடும். அப்படியே ரம்பிக்கவும் செய்வேன். எண்ணி 30வது வரியில் ஒரு அசுவாரசியம் ஏற்பட்டுவிடும். நிறுத்தி வைத்துவிட்டு, யோசிக்கத் தொடங்கிவிடுவேன்.

கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன். காலாற நடந்து போகும் எல்லா சமயங்களிலும் ஏதேனும் ஒரு கதை என்னுள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்த யோசனையை அப்படியே எழுத்தில் வடித்து தரும் இயந்திரம் ஏதேனும் இருக்குமானால் எவ்வளவு செளகரியம் என்று நினைத்துக்கொள்வேன்.

90களில் எனக்குப் பெரும் மனஎழுச்சி இருந்ததுண்டு. மூன்று மணிநேரத்தில் ஒரு சிறுகதை எழுதிவிடும் லாவகம் கைகூடியிருந்தது. எனது பெருங்கூட்டத்தில் ஒருவன், கரைந்தவர்கள் தொகுதியில் உள்ள பல கதைகள் இப்படி எழுதப்பட்டனதாம். மனஎழுச்சி அடங்குவதற்குள் சிறுகதை எழுதி முடிக்கப்பட்டிருக்கும். சுத்தமாக. ஒன்றிரண்டு அடித்தல் திருத்தல்களுடன். பெரும்பாலும் இரண்டாம் படி எழுதுவதில்லை. முதல் படியையே பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறேன். ஒரு போட்டோ காப்பி மட்டும் எடுத்து வைத்துக்கொள்வேன்.

கதை எங்கிருந்து தொடங்கும் என்று என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ஏதோ ஒரு சம்பவமோ, கருத்தோ, எண்ணமோ கதையை எழுதத் தொடங்கும். கணினியில் எழுத உட்காரும் போது, முதல் வரி எப்படி வந்துவிழும் என்று இதுவரை தெரியாது. எழுத எழுதத்தான் பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுதல், அவர்களின் குணாதிசயங்களை வரையறுத்தல், வாழும் சூழலை நிர்ணயித்தல் போன்றவை நடைபெறும். எழுதும் முன், ஒருமாதிரி இப்படியாகக் கதை எழுத வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அதற்கான முடிவையும் யோசித்து வைத்திருப்பேன்.

எழுதத் தொடங்கியபின், முடிவு என் கையில் இல்லை. யோசிக்கும் வேகத்தில் தட்டச்சு செய்ய முடியுமென்பதால், யோசனை நினைத்தறியா திசைகளில் பாயத் தொடங்கும். யோசித்தே இராத பல சூட்சுமங்கள் கதையில் தானே வந்து சிக்கிக்கொள்ளும். வளர்ந்துகொள்ளும். சம்பவங்களும் உரையாடலும் கூட தானே பொருத்தமான இடங்களில் அமைந்துகொள்ளும். உரையாடலைத் தவிர்த்தே நான் எழுத முயற்சிப்பேன்.

பல சமயங்களில் உரையாடல், கதையின் அழுத்தத்தைக் குறைத்துவிடுமோ என்ற தயக்கம் எனக்கு உண்டு. உரையாடலை மிக வலுவாகப் பயன்படுத்துபவர் என்ற நான் நம்புவது இந்திரா பார்த்தசாரதியைத்தான். பலர் உரையாடலில் சறுக்கிவிடுவார்கள். கதை அங்கே தேங்கிவிடும். அல்லது நீட்டி முழுக்கி, எந்தப் பயனும் இல்லாமல் தொணதொணக்கும். இதைத் தவிர்க்க நான் ரம்பத்தில் இருந்து கவனமாக ஒரு உத்தியைப் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் தேவைப்படும் தருணத்தில் என் பாத்திரங்கள் சட்டென இரண்டு மூன்று வரிகள் பேசுவார்கள். முடிக்க மாட்டார்கள். உரையாடலைத் தொடர்ந்து வரும் பகுதி அதை முடித்து மேற்கொண்டு செல்லும்.

ஒரு வகையில் அழுத்தத்தைத் தொடர்வதற்கு இது நல்ல உபாயம்.

கதையில் உணர்வுதான் எனக்குப் பிரதானம். உணர்வு பெரும்பாலும் ஒரு ஊடாட்டத்தின் ஊடேதான் இருக்கும். ஒன்றைச் செய்யலாமா வேண்டாமா என்பது எவ்வளவு பெரிய குழப்பம் என்பது யோசித்துப் பார்த்தால் தெரியும். என் கதைகள் முழுவதும், இந்த ஊடாட்டமும், கேள்விகளும்தான் பின்னிப் பிணைந்து வரும். கீழ் மத்திய தர வாழ்வில் இந்தக் குழப்பத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தக் குழப்பத்தையே வரிகளில் நீட்டித்துக்கொண்டு போகலாம். அழுத்தம் கூடும்.

மற்றொன்று மெளனம். இதில் எனக்கு வாத்தியார் அசோகமித்திரன். ஒரு உதாரணம். ஒரு பாத்திரம் அநுபவிக்கும் துயரத்தை இரண்டு மூன்று விதங்களில் பிரதிபலிக்கலாம். பாத்திரத்தின் மனநிலைக்குள் போய், பிசையும் வேதனையை வார்த்தைகளில் வடிக்கலாம். இப்படியாக வேதனைப்பட்டான், துயரப்பட்டான் என்று வருணித்துக்கொண்டே போகலாம் (இதைத்தான் நமது புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்கள் செய்கிறார்கள்). மூன்றாவது, வேதனைப்படுபவனைச் சுற்றியுள்ள உலகை, அவனது நடவடிக்கைகளை, போக்குகளை வெளியில் இருந்து பார்ப்பது. அவன் மனத்துக்குள் போகாமல், அவனது ரியாக்ஷன்களை மட்டும் பதிவு செய்வது. மற்ற பாணிகளை விட, இதுதான் பயங்கர அழுத்தம் தரக்கூடிய பதிவு. சிந்தாமல் சிதறாமல், அந்த வேதனை என்ற உணர்வு வாசகனைப் போய்ச் சேர, இந்தப் பாணிதான் வெற்றிகரமான பாணி. படித்து
முடிக்கும்போது, மனத்தில் திம்மென ஒரு கனம் இருக்கும். வெற்றிகரமாக உணர்வை வாசகன் மனத்தில் கடத்திவிட்டோம் என்று இதற்கு அர்த்தம்.

பல முக்கியக் கதைகள் இப்படிப்பட்டனதாம். சுந்தர ராமசாமியின் விகாசம், வண்ணதாசனின் குமரேசன் என்பவரும்.., வண்ணநிலவனின் தாமிரபரணிக் கதைகள் தொகுதியில் உள்ள பல கதைகள், கந்தர்வனின் கொம்பன்....

இதையெல்லாம் யோசித்து கான்ஷியஸ்ஸாகச் செய்ய முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. அல்லது என்னால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. இப்படியெல்லாம் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேனே தவிர, எழுதும்போது, என்ன வருகிறதோ அதை அப்படியே வைத்துக்கொள்ளவே விரும்புவேன். மேன்மேலும் செதுக்குகிறேன் பேர்வழி என்று என் மேதாவிலாசத்தை அதில் போட்டுத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

எழுதத் தொடங்கிய 80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் ஒரே கதையை பல படிகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். மேன்மேலும் அதைச் செப்பம் செய்து செய்து மாற்றியிருக்கிறேன். அப்புறம், ஒரு கட்டத்தில் அது தேவையில்லாமல் போய்விட்டது.

II.
இந்தக் கணினி / இணைய நிறுவனமான சி·பிக்கு வந்தபின், எழுதும் பரபரப்பு என்பது முற்றிலும் நீங்கிவிட்டது. என் மனநிலைக்கு ஏற்ப கதைகளை எந்த அழுத்தமோ அவசரமோ இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒருவிதமான மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது. கதை யாருக்காக என்பதில் எனக்கு ஏற்பட்ட மனமாற்றம்தான் இது.

கதை அடுத்தவருக்காகத்தான். அதில் சந்தேகமில்லை. னால், முதலில் அதை நான் ரசிக்க வேண்டும், எழுதுவதை அநுபவிக்க வேண்டும் என்ற பக்குவம் கடந்த சில ண்டுகளாக ஏற்பட்டுவிட்டது. அதனால் கதை எழுதுவதில் மந்தத்தனம் வந்துவிட்டதும் உண்மை. மற்றொரு முக்கிய மாற்றம் பத்திரிகைகள்,பிரசுரம், வெளியீடு தொடர்பாக இருந்த சைகளில் ஏற்பட்ட மாற்றம். முன்பெல்லாம், எனக்கு தர்சம் னந்த விகடன்தான் (இன்றும் சையில்லை என்று சொல்லமாட்டேன்). கல்கியில் நிறைய கதை எழுதினேன். குமுதத்தில் எழுதுவதில் தயக்கம் இருந்ததுண்டு.

ஆனால், விகடன் என்று கனவு. அதில் கதை வரவேண்டும் என்று ரொம்பவும் சை. அங்கே, ரமேஷ் வைத்யா என்றொரு நண்பர் உண்டு. அவரிடம்தான் என் கதைகளைக் கொடுப்பேன். படித்துவிட்டு, நன்றாக இருக்கிறது, னால், எடிட்டோரியல் தான் தீர்மானிக்கணும் என்பார். மூன்று நான்கு மாதத்துக்குள் கதை வெளியாகும். னந்த விகடனுக்குக் கொடுத்த எந்தக் கதையும் திரும்பி வந்ததில்லை. எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எனக்குள் வேறு ஒரு போராட்டம் இருந்துண்டு. அதில் இருந்து விலக விலக நான் நிறைய தெளிந்திருக்கிறேன்.

1. பத்திரிகைக்கேற்ப கதையிருந்தால் தான் பிரசுரிப்பார்கள். இதன் கராலரி,
பிரசுரிப்பதற்கேற்ப கதை எழுதுவது. சிறுபத்திரிகை உலகில் இருந்து வந்த எனக்கு இது இரண்டும் மனத்தில் ஒப்பவில்லை. விகடன், நான் எழுதிய கதைகளை அப்படியே பிரசுரித்தது. ஒரு வார்த்தை கூட மாற்றியதில்லை. இப்போது வேறு மாதிரி சொன்னார்கள், 'கரெக்டா, அவங்களுக்கு ·பிட் கிறா மாதிரி கதை எழுதறீங்க. அதான், அப்படியே போடறாங்க.' பிரச்சினை எங்கே என்று யோசிக்கத் தொடங்கினேன்.

சிறுபத்திரிகை - வெகுஜன பத்திரிகை என்ற பிரிவினை தந்த குழப்பம் இது. வெகுஜன பத்திரிகை எது செய்தாலும் ஏற்கக்கூடாது. அதன் வணிகம், நோக்கம் நல்லிலக்கியத்துக்கு நேர்மாறானது என்று விளக்கம் கூறினார்கள்.

இப்போது நான் எங்கே நிற்கிறேன் என்று யோசித்தேன். என்னைப் பொறுத்தவரை வணிகம் என்றும் தவிர்க்கமுடியாதது. வணிக வெற்றியில்லாமல், எந்த நல்ல விஷயமும் சாத்தியமில்லை. முன்னேற்றமும் சாத்தியமில்லை. வணிக நிறுவனத்துக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரியாதை உண்டு. இடம் உண்டு. விகடன் என்ற பத்திரிகை என் எழுத்தில் தலையிடவில்லை. சொல்லப்போனால், மரியாதையே செய்திருக்கிறது.

2. அடுத்து என்னை நிறுத்திய கேள்வி: நான் எந்த வழியில் வருகிறேன்? நிச்சயம் நான் சிறுபத்திரிகையாளன் இல்லை. அதன் சத்தான பகுதிகள் என்னுள் உண்டு. னால், அதன் மெளடீகங்களுக்கு என்னால் உடன்பட முடியாது. அதே போல், நிச்சயம் நான் வணிக எழுத்தாளனும் இல்லை. என்னால் ஒரு தேவிபாலாவாகவோ, ரமணி சந்திரனாகவோ க முடியாது. கவும் விரும்பவில்லை. இடையே ஒரு வளமான பரம்பரை உண்டு. வணிக இதழ்களில், சமரசம் செய்துகொள்ளாத தமது எழுத்துக்களால் இன்றும் நிலைத்து நிற்கும் தி.ஜா, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, தவன், சுப்பிரமணிய ராஜூ, மாலன் பரம்பரையில் வருபவன் நான்.

நான் எங்கே நிற்கிறேன் என்ற குழப்பம் இப்படித்தான் தீர்ந்தது.

3. எங்கே எழுதினாலும் நான் எப்படி எழுதுகிறேனோ அப்படியேதான் எழுதுகிறேனா? அன்று யோசித்த போதும் சரி, இன்று திரும்பிப் பார்க்கும்போதும், நான் மாறவேயில்லை. நான் எழுதவிரும்பியதை எழுத விரும்பிய வகையில், முறையில் எழுதி வந்திருக்கிறேன். சற்றும் யாருடைய, எதனுடைய அழுத்ததுக்கும் ட்படவில்லை.

இதுபோதும். இதுதான் என் பெரிய பலம். உண்மையில் சொல்கிறேன், நான் தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தது இந்தத் தெளிவு வந்தபின்புதான். ஒப்பியல் நோக்கில், என் தரம் என் சமகாலத்தில் எழுதும் மற்றொருவரோடு வேறுபடவே செய்யும். படிக்கும் ஒவ்வொருவரின் பார்வை சார்ந்து தரம் தரமின்மை
மாறுபடும். அதற்காக நான் கவலைப்பட முடியாது.

இந்த தைரியம் வந்தபின்பு, பிரசுர சை பெருமளவு குறைந்துவிட்டது. விருப்பப்பட்டபடி, எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் பிரதிநிதித்துவப் படுத்தும் கீழ் மத்தியதர சமூகத்தை, எனக்குத் தெரிந் வரையில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறேன். பலருக்குப் பிடித்திருக்கிறது. வேறு பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். நேராக முகத்திற்கு நேரே சொல்லாமல் இருக்கிறார்கள்.

பிடிக்காதவர்கள் குறைசொல்லும்போது ஏற்படும் அதே மனநிலையில்தான், பிடித்தவர்கள் பாராட்டும்போதும் இருக்கிறது. பெரிய வித்தியாசமில்லை.

நேசமுடன்
வெங்கடேஷ்